search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியோமி ராவ்"

    அமெரிக்காவின் கொலம்பியா மாவட்டத்தின் மேல்முறையீடு நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியோமி ராவ் பதவி ஏற்றார். #NeomiRao #IndianAmericanWoman #DCCourtJudge
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் மாநில நீதிமன்றங்களும் மாவட்ட நீதிமன்றங்களும் தனிதனியாக இயங்கி வருகின்றன. இவ்விரு நீதிமன்றங்களிலும் வழங்கப்படும் தீர்ப்புகள் தொடர்பாக மேல் முறையீடு செய்ய மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் தனி நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டுக்கு அடுத்தப்படியாக மிகுந்த அதிகாரம் கொண்ட நீதிமன்றங்களாக மேல்முறையீடு நீதிமன்றங்கள் இங்கு உள்ளன.

    இந்நிலையில் கொலம்பியா மாவட்ட மேல் முறையீடு, நீதின்மன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான நியோமி ராவ் என்பவரின் பெயரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முன் மொழிந்திருந்தார். இந்த நியமனத்துக்கு செனட் சபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.



    இதைத்தொடர்ந்து கொலம்பியா மாவட்டத்தின் மேல்முறையீடு நீதிமன்ற  நீதிபதியாக நியோமி ராவ் நேற்று வெள்ளை மாளிகையில் பதவி ஏற்றார். அவருக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி பிரட் கவானா பதவி பிரமானம் செய்து வைத்தார்.

    இந்தியாவைச் சேர்ந்த ஜெரின் ராவ் - ஜெஹாங்கீர் நரியோஷாங் தம்பதியரின் மகளாக அமெரிக்காவின் டெட்ராய் மாநிலத்தில் பிறந்த நியோமி ராவ் (45) ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின் சட்டப்பள்ளியில் அரசியலமைப்பு , நிர்வாகம் ஆகிய துறைகளின் சட்டப்பேராசிரியையாக பணியாற்றினார். பாராளுமன்றத்தின் நம்பகத்தன்மை மற்றும் அரசியலமைப்பு தொடர்பாக சட்டப்பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார்.

    அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சி காலத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் சக்தி வாய்ந்த மாவட்ட மேல்முறையீடு நீதிமன்ற நீதிபதியாக முன்னர் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அடுத்தப்படியாக அதிகாரம் மிக்க இந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது இந்திய வம்சாவளி நபர் நியோமி ராவ் என்பது குறிப்பிடத்தக்கது. #NeomiRao #IndianAmericanWoman #DCCourtJudge

    அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #DonaldTrump #USCourt #NeomiRao
    வாஷிங்டன்:

    அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின்போது இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார்.

    அமெரிக்காவில் பல பெண்களின் பாலியல் புகார்களுக்கு ஆளானவர் நீதிபதி பிரெட் கவனாக் (வயது 53). அங்கு வாஷிங்டன் மாகாணத்தில் கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டில் நீதிபதியாக இருந்தவர். அவரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்தார். அதற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்தது. அதையடுத்து அவர் கடந்த மாதம் 6-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார்.



    அதைத்தொடர்ந்து அவர் வகித்து வந்த வாஷிங்டன் மாகாணம், கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவி காலியானது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்படுவது இந்த கோர்ட்டு ஆகும்.

    இந்தப் பதவிக்கு இந்திய வம்சாவளி பெண்ணான நியோமி ஜகாங்கிர் ராவ் (45) என்பவரை ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்துள்ளார். இதுபற்றிய அறிவிப்பை வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது அவர் வெளியிட்டார்.

    அப்போது அவர் கூறுகையில், “கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டில் நீதிபதி பிரெட் கவனாக் இடத்துக்கு நியோமி ராவை நான் தேர்வு செய்து இருக்கிறேன். அவர் அற்புதமான மிகச்சிறப்பான நபராக இருப்பார்” என்று குறிப்பிட்டார்.

    அதைத் தொடர்ந்து நியோமி ராவ், ஜனாதிபதி டிரம்புக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். அப்போது அவர், “செல்வாக்கு மிக்க அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு என்னை தேர்வு செய்திருப்பதின் மூலம் என் மீது ஜனாதிபதி வைத்துள்ள நம்பிக்கையை காட்டி உள்ளார். அதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன்” என குறிப்பிட்டார்.

    நியோமி ராவ் தேர்வு பற்றிய அறிவிப்பை டிரம்ப் வெளியிட்ட தீபாவளி கொண்டாட்டத்தில், இந்திய தூதர் நவ்தேஜ் சிங் சர்னா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    நியோமி ராவ் தேர்வுக்கு அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபை தனது ஒப்புதலை வழங்க வேண்டும். அந்த சபையில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், நியோமி ராவ் தேர்வுக்கு ஒப்புதல் கிடைப்பது உறுதி.

    நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ள கோர்ட்டில் இந்தியரான சீனிவாசன் ஏற்கனவே நீதிபதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    நியோமி ராவ், இந்தியாவை சேர்ந்த பார்சி இன பெற்றோரான ஜகாங்கிர் நாரியோஷாங் ராவ், ஜெரின் ராவ் தம்பதியரின் மகளாக 1973-ம் ஆண்டு, மார்ச் மாதம் 22-ந் தேதி பிறந்தவர். மிச்சிகனில் வளர்ந்தார். டெட்ராய்டு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். புகழ்பெற்ற ஏல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து மிகச்சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றார். பின்னர் சிகாகோ பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் படித்து சட்டத்தில் பட்டம் பெற்றார்.

    சிறிது காலம் ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.

    கடந்த ஆண்டு இவரை ஜனாதிபதி டிரம்ப், தகவல் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் அலுவலகத்தின் நிர்வாகியாக நியமித்தார்.

    இவர் அமெரிக்காவில் ஆலன் லெப்கோவிட்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  #DonaldTrump #USCourt #NeomiRao 
    ×